சென்னை; சென்னை அருகே மாங்காட்டில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் அருகே வெள்ளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவகிரக தலங்களில், சுக்ரன் பரிகார தலமாக இக்கோவில் உள்ளது. வெள்ளீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் பிரம்மோத்சவ விழா விமரிசையாக நடப்பது வழக்கம். இந்தாண்டு பிரம்மோத்சவ விழா ஜூன் 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 30ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.