சர்வதேச யோகா தினத்தில் 50 ஆயிரம் பேருக்கு யோகா பயிற்சியளித்த ஈஷா



தொண்டாமுத்தூர்; ஈஷா யோகா மையம் சார்பில், சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில், 50 ஆயிரம் பேருக்கு, இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை ஈஷா யோகா மையம் சார்பில், சர்வதேச யோகா தினத்தையும் முன்னிட்டு, நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோகா வகுப்புகள் இன்று நடந்தது. தமிழகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது. கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள ஆதியோகி முன்பு நடந்த சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில், 200க்கும் மேற்பட்ட விரைவு அதிரடி படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. கோவையில் உள்ள ஐ.என்.எஸ்., அக்ரானி, 43 விங் ஏர் போர்ஸ் ஸ்டேஷன் மற்றும் ஏர் வாரியர் ஆகிய கடற்படை மற்றும் விமானப்படை தளங்களில் யோகா வகுப்புகள் நடந்தது. மதுக்கரை 195 பீல்ட் ரெஜிமென்ட் ராணுவ முகாமிலும், வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியிலும், ராணுவ அதிகாரிகளுக்கான யோகா வகுப்புகள் நடந்தது. அதேபோல, பெங்களூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி முன்பு பிரம்மாண்ட யோகா வகுப்பு நடந்தது. சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள், வங்கிகள், கல்லூரி, பள்ளிகளில் சிறப்பு யோகா வகுப்புகள் நடந்தது. நாடுமுழுவதும் நடந்த யோகா பயிற்சியில், 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்