மானாமதுரை: மேலநெட்டூர் சொர்ணவாரீஸ்வரர், சாந்தநாயகி அம்மன் கோவில் ஆனி பிரம்மோற்ஸவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கோயிலில் விழா நாட்களின் போது சுவாமி அன்னம்,கமலம்,சிம்மம், ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக,ஆராதனை, பூஜை நடைபெற்றது. திருக்கல்யாணம் வரும் 27ம் தேதியும், 28ம் தேதி மாலை 4:00 மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது.