கோவை ; ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தை யொட்டி கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரர் மற்றும் நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் மற்றும் நடராஜ பெருமான், சிவகாமி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.