கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு



 விழுப்புரம்: கோலியனுார் பூமி, நீலா தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், ஏகாதசி வழிபாடு நடந்தது.


அதனையொட்டி நேற்று மதியம் 3:30 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் பெருமாள் தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் உள் புறப்பாடு நடந்தது. பின், அர்த்த மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து, அர்ச்சனை, தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்