திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்டம் கோலாகலம்



திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற ஆனி பெருந்திருவிழா ஜூன் 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தின்போது, ஆசியாவிலேயே அதிக எடை கொண்டதாக கருதப்படும் சுவாமி நெல்லையப்பர் தேர் உள்பட 5 தேர்கள் ரதவீதிகளில் வலம் வரும். சிறப்பு மிக்க இந்த ஆனி தேரோட்டம் இன்று 28ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்களை லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்