சுயம்பு காளி அம்மன் கோவிலில் 17ல் ஆடி திருவிழா துவக்கம்



ஹலசூரு: ஹலசூரு சுயம்பு காளி அம்மன் கோவிலில், வரும் 17ம் தேதி ஆடி திருவிழா துவங்குகிறது. பெங்களூரின் ஹலசூரு மார்க்கெட் காளி அம்மன் கோவில் தெருவில், சுயம்பு காளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழா வரும் 17ம் தேதி துவங்குகிறது.

அன்று மதியம் 12:30 மணிக்கு பக்தர்களுக்கு காப்பு கட்டப்படுகிறது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும் 26ம் தேதி மதியம் 1:00 மணிக்கு கும்ப பூஜை; கூழ் ஊற்றுதல். இரவு 7:00 மணிக்கு பச்சை கரக ஊர்வலம் நடக்கிறது. ஆகஸ்ட் 2ம் தேதி காலை 9:00 மணிக்கு, சுயம்பு காளி அம்மன் வீற்றிருக்கும் தேர் பவனி; மதியம் 3:00 மணிக்கு வனபோஜனம் நடக்கிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆகஸ்ட் 9ம் தேதி காலை 8:00 மணிக்கு, மஹா அபிஷேகம்; அலங்காரம்; ஆராதனை நடக்கும். மஹா அபிஷேகத்தில் பங்கேற்க பூஜை கட்டணம், 300 ரூபாய். பால், தயிர், இதர அபிஷேக பொருட்களை கோவிலில் கொடுக்கலாம். திருவிழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனின் அருளை பெற்று செல்லுமாறு ப.பார்த்திபன், ப.சந்தானம் அழைப்பு விடுத்துள்ளனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்