செல்லாண்டியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா கோலாகலம்



திருப்பூர்: ‘ஓம் சக்தி… பராசக்தி’  என்று கோஷமிட்டபடி,  ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவில், குண்டம் இறங்கி வழிபட்டனர். 

திருப்பூரின் காவல் தெய்மாகிய ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில், ஆடி குண்டம் திருவிழா  20 ம் தேதி மகாமுனி பூஜையுடன் துவங்கியது.  21ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல், நொய்யலில் இருந்து சக்தி அழைத்தல்; 23ம் தேதி பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.  26ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று காலை, குண்டம் திருவிழா நடந்தது. அதிகாலையில், காப்பு கட்டிய பக்தர்கள் வரிசையில் இருந்தபடி, குண்டம் இறங்கினர்.தலைமை பூசாரி, அருளாளர்கள் குண்டம் இறங்கிய பின், பக்தர்கள் குண்டம் இறங்கினர். ‘ஓம்சக்தி... பராசக்தி’ என்று கோஷமிட்டபடி குண்டம் இறங்கி வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு, மகா அபிஷேகம், அக்னி அபிஷேகம், மாவிளக்கு மற்றும் பொங்கல் விழா நடந்தது. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய செல்லாண்டியம்மன், மாலையில் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை மஞ்சள்நீர் விழாவும், 31 ம் தேதி மறுபூஜை – வாராஹி அம்மன் அலங்காரமும் நடைபெற உள்ளது. 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்