ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஆடிக்கரகம் திருவிழா



சிவாஜிநகர்: சிவாஜிநகர் ஸ்ரீராமுலா சன்னிதி தெருவில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் 64ம் ஆண்டு ஆடிக் கரக திருவிழா கொண்டாடப்படுகிறது.

அமாவாசை பூஜை: இன்று காலையில் அம்மனுக்கு மஹா அபிேஷகம், புஷ்ப அலங்காரம், அமா வாசை ஊஞ்சல் சேவை, பம்பை உடுக்கை யுடன் பக்தி பாடல்கள், மஹா மங்களாரத்திக்கு பின், மஹா அன்னபிரசாத விநியோகம், இரவில் டி.வினோத்குமார் சக்தி கரகம் எடுத்து வருதல், அம்மனுக்கு காப்பு கட்டப்படுகிறது.

காலையிலும், இரவிலும் பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. வரும், 14ம் தேதி காலையில் மஹா அபிஷேகம், சந்தன அலங்காரம், இரவில் வி.ஆனந்த குமார் புஷ்ப கரகம் எடுத்து வருதல், பூஜைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் தீர்த்த பிரசாத விநியோகம்; விழாவில் அமைச்சர்கள் ரிஸ்வான் ஹர்ஷத் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

அதுபோல, 16ம் தேதி காலையில் மஹா அபிஷேகம், புஷ்ப அலங்காரம், கும்ப பூஜை, கூழ் ஊற்றல், பம்பை உடுக்கையுடன் பக்திசை, மஹா மங்களாரத்திக்கு பின் தீர்த்த பிரசாத விநியோகம், மஹா அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது. அதன் பின் அம்மனின் காப்பு அவிழ்க்கப்படுகிறது.

விழா ஏற்பாடுகளை, கோவில் தலைவர் எஸ்.எம்.வேலு, பொதுச் செயலர் எஸ். ரமேஷ், பொருளாளர் சதீஷ்குமார் செய்துள்ளனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்