பன்னர்கட்டா ரோடு: பெங்களூரு கோடிசிக்கனஹள்ளி, ‘பக்த பிருந்தாவன்’ அமைப்பு சார்பில் வரும் 15, 16ம் தேதிகளில், நான்காம் ஆண்டு ராதா கல்யாண மஹோத்சவம், பன்னர்கட்டா ரோடு ராயல் மீனாட்சி சங்கம் அருகில், பில்லவ சங்கம் தேவகி ஆனந்த் சுவர்ண கன்வென்ஷன் ஹாலில் நடக்கிறது.
முதல் நாளான 15ல், காலையில் நாகேஷ் வாத்தியாரின் கணபதி ஹோமம்; ஹூலிமாவு சவுந்தர்ய லஹரி குழுவினரின் விஷ்ணு சஹஸ்ரநாமம்; தோடயமங்களம் குரு கீர்த்தனைகள், ஜெயதேவா அஸ்தபதி, ராம்கோபால் பாகவதர் குழுவினரின் ஹரித்வார மங்களம்; மதியம் பஞ்சபதி சிவபிரியா ராமசாமி குழுவினரின் தேவத தியானங்கள்; மாலையில் பூஜை, தியானம், திவ்யநாமம், டோலோத்சவம், ராம்கோபால் பாகவதர் குழுவினரின் ஹரித்வார மங்களம் நடக்கிறது.
இரண்டாம் நாளான 16ல், காலையில் புதுக்கோட்டை நரசிம்ம பாகவதரின் உஞ்சவிருத்தி; ஸ்ரீ ராதா மாதவா கல்யாண உத்சவம், ராம்கோபால் பாகவதர் குழுவினரின் ஹரித்வார மங்களம்; மதியம் ஆனந்த் பாகவதர் குழுவினரின் பண்டரி பஜனை; மாலையில் ஈரோடு மதுசூதனன் பாகவதர் குழுவினரின் ஆஞ்சநேய உத்சவம் நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு, 98431 71652, 94487 12904, 94810 34186 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.