மதுரை: மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியை காண திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தங்க பல்லாக்கில் புறப்பட்டார். வழிநெடுகிலும் பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். தற்போது மீனாட்சி அம்மன் கோவில் வந்த சுப்ரமணியசாமி தெய்வானை உடன் கிழக்கு சன்னதி வாசல் வழியாக கோவிலுக்குள் சென்றனர்.