கிருஷ்ணராயபுரம்: மேட்டுமகாதானபுரம் பிடாரி அம்மன் கோவிலில், ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டுமகாதானபுர த்தில், பிரசித்தி பெற்ற பிடாரி அம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை யை முன்னிட்டு, இக்கோவிலில் நேற்று 19 ல், சிறப்பு வழிபாடு, பூஜை நடந்தது. அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. மகாதானபுரம், மேட்டுமகாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.