Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>வரவிருக்கும் பண்டிகை> வைகாசி விசாகம்
வைகாசி விசாகம்
வைகாசி விசாகம்

விசாகம், வைகாசி, அனிலநாள், சோதிநாள் எனவும்படும். இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன் முதலான அசுரர்களின்  கொடுமைகளைத் தாங்கலாற்றாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். கருணையங்கடலாகிய சிவபிரான்  அசுரர்களுடைய கொடுமைகளினின்று அவர்களைக் காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணின்றும் ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார்.  அவ்வாறு பொறிகளும் வாயு, அக்கினி, தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தது.  சரவணப் பூந்தடாகத்திலே ஆறு பொறிகளும் ஆறு திருக்குழந்தைகளாகி விளங்கின. விஷ்ணுமூர்த்தி கார்த்திகை முதலிய கன்னியர்கள் மூலமாக  அக்குழந்தைகட்குப் பாலூட்டுவித்தார். ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசிமாதத்து விசாகநாள் ஆகும்.

ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப் படுகின்றது. எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும்  பொருட்டு எம்பிரானே தந்திருவிளையாடலாற் குழந்தையான நாளாதலின் சைவமக்கள் வழிபாட்டிற்கு இந்நாள் மிகவும் சிறந்ததாகும். இத்தினத்தில்  கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார்  அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும். புத்தன் (சித்தார்த்தன்)  அவதரித்ததும்(பிறப்பு) புத்தாரனதும், (திருவருள்) நிருவாணமடைந்ததும்(மறைவு) இதே திதியிற்தான் என்பர்.

முருகனின் பிறந்த நாள்:
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை  வேனில் விழா என்றும் கூறுவர். சிம்மாசலம் என்னும் ஊரில் குன்றின் மேல் நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். ஆண்டுதோறும் வைகாசி  விசாகத்தன்றுதான் அப்பெருமானைக் காண இயலும். பிறகு சந்தனப் பூச்சு பூசி வைத்து விடுவார்கள். வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும்  கூறப்படுகிறது. சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே நாளன்றுதான். எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான்  என்பார்கள். இந்நாளில் எமனுக்குத் தனி பூஜை உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது மக்களின் நம் பிக்கை. வைகாசி விசாகத்தினை ஒட்டி காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கருட சேவை நடைபெறும். இந்திரன் வைகாசி விசாகத்தன்று  சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். திருமழபாடியில் ஈசன் வைகாசி விசாக நாளில் திருநடனம் புரிகிறார். நம்மாழ்வார் அவதரித்த  நாள், வைகாசி விசாகம் என்று ஆழ்வார் திருநகரியில் வெகு விமரிசையாக விழா கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் வைகாசி விசாகம் பத்து  நாட்கள் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர்,  பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.

வசந்த காலம்: உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவேனில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம்  என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு. காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவதாரம் செய் தது வைகாசி மாத அனுஷ நட்சத்திர நாளில்தான். நாயன்மார்களுள் கழற்சிங்கர், சோமாசி மாறர், திருஞான சம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர்,  திருநீலநக்கர், முருகநாயனார், நமிநந்தியடிகள் ஆகியோர் அவதரித்ததும் வைகாசி மாதத்தில்தான். பெரிய புராணம் அருளிய சேக்கிழார்  சுவாமிகளும் வைணவப் பெரியாரான நம்மாழ்வாரும் அவதரித்தது இந்த மாதத்தில் தான்.

திருத்தணியில் பல தீர்த்தங்கள் உள்ளன. இதில் குமார தீர்த்தமும் ஒன்று. இதில் வைகாசி விசாகத்தன்று நீராடி முருகப் பெருமானை வழிபட்டால்  சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி  முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலனைத் தருவதுடன் எதிர்பாரா  ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். வைகாசி மாத அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை  எண்ணி விரதமிருப்பர். வெறும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும்.

இலங்கையின் கதிர்காமம், நல்லூர் கந்தசாமி கோயில், மாவிட்டபுர கந்தசாமி கோயில், வில்லூன்றி கந்தசாமி கோயில் கொழும்பு சுப்ரமண்யர் கோயில். மேலைப்பூ வேலி பூச்சந்தி கோயில்கள் இலங்கையின் அறுபடை வீடுகள். இலங்கை கதிர்காமத்தில் செப்பு ஓடாமல் வேயப்பட்ட கொட்டகைதான் முருகனின் கோயில். முன் வாசலில் குதிரைகள் உள்ளன. 7-வது திரையில் முருகன் மயில் மீது இரு தேவியருடன் அமர்ந்த ஓவியம் உள்ளது. திரைக்குப் பின் பெட்டியில் சடாட்சர மந்திரம் யந்திர வடிவில் உள்ளது. இங்கு பூஜை அபிஷேகம் யாவும் மரகத்வேலுக்குத்தான் இங்கு நடைபெறும் வைகாசி விசாக விழாவில் ஆறுமுகப் புறப்பாடு மிகப்பிரபலம்.

ஆதிசங்கரர் அருளிய பிரசாதம்: கேரளாவில் உள்ள கொல்லூர் முகாம்பிகை கோயிலில், இரவு பூஜையின்போது அம்பிகைக்கு சுக்கு கஷாயம் நிவேதனம் செய்வர். சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் இந்த விசேஷ பிரசாதம் வழங்கும் முறையை ஆதிசங்கரரே ஆரம்பித்து வைத்ததாக வரலாறு கூறுகிறது. அம்பிக்கைக்கு சமர்ப்பித்த சுக்கு கஷாயம் பிறகு, பக்தர்களுக்கு வழங்குவர்.

வைகாசியில் அனுமன் ஜெயந்தி: தமிழகத்தில் மார்கழி மாதம் அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால், வடநாட்டில் வைசாக (வைகாசி) பவுர்ணமிக்கு அடுத்த செவ்வாய்க்கிழமையன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. லக்னோவுக்கு அருகில் ஆலிகஞ்ச் என்ற இடத்தில் அருள்புரியும் அனுமனை வைகாசி பவுர்ணமி அன்று விசேஷமாக வழிபடுகிறார்கள். அன்று லக்னோ நகரிலிருந்து ஆலிகஞ்ச் திருத்தலத்தில் உள்ள அனுமன் கோயில்வரை ஆண்கள் கோவணம் மட்டும் அணிந்து சாஷ்டாங்கமாக வணங்கியபடி சென்று வழிபடுகிறார்கள். முதலில் சாஷ்டாங்கமாக கைகளை நீட்டி நமஸ்காரம் செய்யும்போது, கைவிரல்கள் மூடிய இடத்தில் ஒரு கல்லை அடையாளமாக வைத்து, பிறகு, எடுத்து நின்று அந்தக் கல் வைத்த இடத்திலிருந்து அடுத்து (படுத்தபடி) நமஸ்காரம் செய்வார்கள். இப்படியே தொடர்ந்து நமஸ்காரம் செய்து கோயிலை அடைவார்கள். இதற்கு சயன தபஸ் என்று பெயர்.

வைகாசிப் பவுர்ணமியில் வரும் விசாக நாள் என்பது முருகப்பெருமான் பொய்கையில் தாமரை மலரில் அவதரித்தத் திருநாள் என்பதால், அன்று முருகப்பெருமான் அருள்புரியும் கோயில்கள் விழாக் கோலம் காணும். சிவன் கோயில்களில் சிவலிங்கத்திற்கு சந்தனத்தால் அபிஷேகமும், மணமுள்ள மலர்களால் அலங்காரமும் செய்வார்கள். மேலும், புத்தர் பெருமான் அவதரித்ததும், ஞானம் பெற்றதும், முக்தி பெற்றதும் இந்நாளில்தான். பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் தவமிருந்து இறைவனிடம் பாசுபதம் என்னும் ஆயுதம் பெற்றதும் வைகாசி விசாகம். ‘வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்’ என்று போற்றப்படும் நம்மாழ்வார் அவதார தினம் வைகாசி விசாகம். பொதுவாக, ஐப்பசிப் பவுர்ணமி நாளன்று சிவன்கோயிலில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேக வைபவம் நடைபெறும். ஆனால், திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் கோயிலில் அருள்புரியும் ஜம்புகேஸ்வரருக்கு வைகாசிப் பவுர்ணமியில் அன்னாபிஷேகம், பால் - மங்காய் நிவேதன வழிபாடுகள் நடைபெறும். இதனை தரிசித்தால் பசித்த வேளைக்கு உணவு நம்மைத் தேடிவரும் என்பது ஐதீகம்.

Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar