கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சித்திரை மாதம், ஏகாதசி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் தங்க அங்கி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.