பழநியில் 18 ம் நூற்றாண்டு செப்பேடு கண்டுபிடிப்பு



பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி முருகனுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

பழநியில் சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டறியப்பட்டது பழநி திருமஞ்சன பண்டாரம் சண்முகம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்தனர். இது குறித்து அறிய தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி அவர்களிடம் வழங்கினர். செப்பேட்டு 875 கிராம் எடையும் 44 சென்டிமீட்டர் உயரம் 25 சென்டிமீட்டர் அகலம் இருந்தது. இது சிவகங்கை சீமை அரசர் விசய ரகுநாத பெரிய உடையார் தேவர், பழநி மலை முருகனுக்கு வழங்கிய பூதானம் எனும் நிலக் கொடையை பற்றி குறிப்பிடுகிறது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறுகையில், "பழநியை சேர்ந்த காசி பண்டாரத்தின் மகன் பழநிமலை பண்டாரத்திற்கு சிவகங்கை அரசர் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மயில், வேல், சூரியன், சந்திரன், அரசர் உள்ளிட்ட படங்கள் வரையப்பட்டு முன் பின் என இரு பக்கங்களும் 100 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. மேலும் முசுட்டாக்குறிச்சி, பெத்தனேந்தல், தேசிகனேந்தல், நாயனேந்தல், மருகதவல்லி, சின்ன குளம் ஆறு ஊர்களை வரிகள் நீக்கி, திருக்கால சந்தியில், திருவிளக்கு, திருமாலை, அபிஷேகம் அபிஷேகம் நெய்வேத்தியம் நடைபெற கொடை அளிக்கப்பட்டுள்ளதாக உள்ளது. அரசரின் 123 பட்டங்கள் புகழுடன் பொறிக்கப்பட்டுள்ளன பின்பக்கம் 65 ஆவது வரிக்கு இடையில் தெலுங்கு மொழியில் ஆறுமுக சகாயம் என்ற பெயர் உள்ளது. இது ஆய்வுக்குரியதாகும்." என்றார்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்