விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு



சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறைவிருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு காலை பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல், மலர் மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஆழத்து விநாயகர் அருள்பாலித்தார். 


* மணவாள நல்லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், சித்தி விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைநடந்தது. தொடர்ந்து, வெள்ளிக் கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். அதேபோல், ஆற்றங்கரை சித்தி விநாயகர், காந்தி நகர் நர்த்தனவிநாயகர், அய்யனார் கோவில் தெரு வழித்துணை விநாயகர், ரயில்வே குடியிருப்பு விநாயகர், கடலூர் ரோடு விஜய விநாயகர், பெரியார் நகர் வினை தீர்த்த சக்தி விநாயகர், செல்வவிநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.



* தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அருகே சுந்தர விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்