பதிவு செய்த நாள்
06
டிச
2016
03:12
கோவை: கோவை ரத்தினபுரி மணீஸ் நகர், ஸ்ரீராம் சங்கரி அப்பார்ட்மென்ட்டில், மழை தொடர வேண்டி வருண ஜெபம் நடந்தது. கோவை, ரத்தினபுரி மணீஸ் நகர், ஸ்ரீராம் சங்கரி அப்பார்ட்மென்ட் நண்பர்கள் குழு சார்பில், மழை தொடர வேண்டி, வருண ஜெபம் நடந்தது. விநாயகர் வழிபாடு, கலச வழிபாடு, எட்டு திசை தேவதைகளுக்கு யாக வேள்வி நடந்தது. அதன்பின், தொட்டி தண்ணீரில் நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும், வேதவிற்பனர்கள் வருண பகவானை வேண்டி, வேதங்களை முழங்கி வருண ஜெபம் செய்தனர். நண்பர்கள் குழுவினர் கூறுகையில், ‘மழை பெய்ய வேண்டிய பல்வேறு வழிபாடு முறைகளை கையாள்கின்றனர். கோவையில் தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழையும் தீவிரமடையவில்லை. அதனால், மழை தீவிரமடைய வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் உயர வேண்டும், விவசாயம், கால்நடை செழிப்படைய வேண்டும் என்பதற்காக வருண ஜெபம் நடத்துகிறோம்’ என்றனர்.