SS சரஸ்வதி அந்தாதி (மகாகவி கம்பர் இயற்றியது) - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சரஸ்வதி அந்தாதி (மகாகவி கம்பர் இயற்றியது)
சரஸ்வதி அந்தாதி (மகாகவி கம்பர் இயற்றியது)
சரஸ்வதி அந்தாதி (மகாகவி கம்பர் இயற்றியது)

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை-தூய
உருப்பளிங்கு போல்வாள், என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்.

படிக நிறமும், பவளச்செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையும்-துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத மும்துதித்தால்
கல்லும் சொல் லாதோ கவி?

நூல்

1. சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவி, செஞ்சொல்
தார் தந்த என்மனத் தாமரை யாட்டி, சரோருகமேல்
பார் தந்த நாதன் இசைதந்த ஆரணப் பங்கயத்தாள்
வார் தந்த சோதிஅம் போருகத் தாளைவணங்குதுமே.

2. வணங்கும், சிலைநுதலும் கழை தோளும்வன முலைமேற்
சுணங்கும், புதிய நிலவெழு மேனியும் தோட்டுடனே
பிணங்கும் கருந்தடங் கண்களும், நோக்கிப் பிரமன் அன்பால்
உணங்கும் திருமுன்றி லாய், மறை நான்கும் உரைப்பவளே.

3. உரைப்பார் உரைக்கும் கலைகள் எல்லாம் எண்ணில்
உன்னையன்றித் தரைப்பால் ஒருவர் தரவலரோ?தண்
தரளமுலை வரைப்பால் அது தந்து இங்கெனைவாழ்வித்த
மாமயிலே விரைப்பா சடை மலர்வெண் தாமரைப் பதி மெல்லியலே.

4. இயலானது கொண்டு நின் திருநாமங்கள் ஏத்துதற்கு
முயலாமையால் தடுமாறுகின்றேன்; இந்த மூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே, நின் திருவருளுக்கு
அயலாய் விடாமல் அடியேனையும் உவந்து ஆண்டருளே.

5. அருணோ தயத்திலும் சந்திரோதயம் ஒத்து அழகு எரிக்கும்
திருக்கோல நாயகி, செந்தமிழ்ப் பாவை திசை முகத்தால்
இருக்கோது நாதனும், தானும் எப்போதும் இனிதிருக்கும்
மருக்கோல நாண் மலராள் என்னை ஆளும் மடமயிலே.

6. மயிலே, மடப்பிடியே, கொடியே இளமான் பிணையே
குயிலே, பசுங்கிளியே, அன்னமே மனக்கூர் இருட்கோர்
வெயிலே, நிலவெழும் மேனி மின்னே, இனி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற் பாதங்களே.

7. பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி; வெள்ளிதழ் பூஞ்
சீதாம் புயத்தில் இருப்பாள்; இருப்ப என் சிந்தையுள்ளே
ஏதாம்? புவியில் பெறல் அரிதாவது எனக்கினியே !

8. இனிநான் உணர்வது எண்ணென் கலையாளே, இலகு தொண்டைக்
கனி நாணும் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலஅயன்
தனி நாயகியை அகிலாண்டமும் பெற்ற தாயை மணப்
பனிநாள் மலர் உறை பூவையை ஆரணப் பாவையையே.

9. பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவும் கலைகள் விதிப்பாளிடம், விதியின் முதிய
நாவும், பகர்ந்த தொல் வேதங்கள் நான்கும், நறுங்கமலப்
பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே.

10. புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென் கோ?
அந்தியில் தோன்றிய தீபம் என்கோ? நல் அருமறை யோர்
சந்தியில் தோன்றும் தபனன் என்கோ? மணித் தாமம் என்கோ?
உந்தியில் தோன்றும் பிரான் புயந் தோயும் ஒருத்தியையே.

11. ஒருத்தியை, ஒன்றும் இலா என் மனத்தின் உவந்து தன்னை
இருத்தியை, வெண்கமலத்து இருப்பாளை எண்ணெண் கலை தோய்
கருத்தியை, ஐம்புலனும் கலங்காமல் கருத்தை யெல்லாம்
திருத்தியை, யான்மற வேன்; திசை நான் முகன் தேவியையே.

12. தேவரும், தெய்வப் பெருமானும், நான்மறை செப்புகின்ற
மூவரும், தானவர் ஆகி உள்ளோரும், முனிவரும்
யாவரும், ஏனைய எல்லா உயிரும் இதழ் வெளுத்த
பூவரும் மாதின் அருள்கொண்டு, ஞானம் புரிகின்றதே.

13. புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்து  இருளை
அரிகின்றது, ஆய்கின்ற எல்லா அறிவின் அரும் பொருளைத்
தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம் தெளிந்து முற்ற
விரிகின்றது, எண்ணென் கலைமாது உணர்த்திய வேதமே.

14. வேதமும், வேதத்தின் அந்தமும் அந்தத்தின் மெய்ப் பொருளாம்
பேதமும், பேதத்தின் மார்க்கமும், மார்க்கப் பிணக்கு அறுக்கும்
போதமும், போத உருவாகி எங்கும் பொதிந்த விந்து
நாதமும், நாதவண்டு ஆர்க்கும் வெண்டாமரை நாயகியே.

15. நாயகம் ஆனமலர் அகமாவதும் ஞான இன்பச்
சேய் அகம் ஆன மலர் அகமாவதும் தீவினையால்
ஏய் அகம் மாறிவிடும் அகமாவதும் எவ்வுயிர்க்கும்
தாயகம் ஆவதும், தாதார் சுவேத சரோருகமே.

16. சரோருகமே; திருக்கோயிலும் கைகளும் தாள் இணையும்
உரோருகமும், திரு அல்குலும், நாபியும் ஓங்கிருள் போற்
சிரோருகம் சூழ்ந்த வதனமும் நாட்டம், சேயிதழும்
ஓரோர் உகம் ஈர் அரை மாத்திரை ஆன உரை மகட்கே.

17. கருந்தாமரை மலர், கண் தாமரைமலர், காமருதாள்
அருந்தாமரை மலர், செந்தாமரை மலர், ஆலயமாத்
தருந்தாமரை மலர், வெண்தாமரை மலர் தாவில் எழில்
பெருந்தாமரை மணக்கும் கலைக்கூட்டப் பிணைதனக்கே.

18. தனக்கே துணிபொருள் என்னும் தொல்வேதம்; சதுர் கத்தோன்
எனக்கே சமைந்த அபிடேகம் என்னும்; இமையவர் தாம்
மனக்கேதம் மாற்றும் மருந்து என்ப; சூடும் மலர் என்பன் யான்
கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே.

19. கமலந்தனில் இருப்பாள் விருப்போடு அம்கரம் குவித்துக்
கமலம் கடவுளர் போற்றும் மென்பூவை; கண்ணில் கருணைக்
கமலந்தனைக் கொண்டுகண்டு, ஒருகால் தம் கருத்துள் வைப்பார்
கமலம் கழிக்கும் கலைமங்கை ஆரணி காரணியே.

20. காரணன் பாகமும் சென்னியும் சேர்தரு கன்னியரும்
நாரணன் ஆகம் அகலாத் திருவும், ஓர் நான் மருப்பு
வாரணன் தேவியும், மற்றுள்ள தெய்வ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்த குற்றேவல் அடியவரே.

21. அடிவேதம் நாறும்சிறப்பு ஆர்ந்த வேதம் அனைத்தினுக்கும்
முடிவே, தவள முளரி மின்னே, முடியா இரத்ன
வடிவே, மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின்
விடிவே, அறிந்து என்னை ஆள்வார் தலந்தனில் வேறு இலையே.

22. வேறு இலையென்று, உன் அடியாரிற், சுடி விளங்கும் நன்பேர்
கூறிலை, யானும் குறித்து நின்றேன்; ஐம்புலக் குறும்பர்,
மாறிலை கள்வர் மயக்காமல், நன் மலர்த்தாள் நெறியில்
சேறிலை ஈந்தருள்; வெண்தாமரை மலர்ச் சேயிழையே.

23. சேதிக்கலாம் தர்க்க மார்க்கங்கள் எவ்வௌர் சிந்தனையும்
சோதிக்கலாம்; உறப் போதிக்கலாம்; சொன்னதே துணிந்து
சாதிக்கலாம்; மிகப் பேதிக்கலாம் முத்தி தான் எய்தலாம்;
ஆதித் கலாமயில் வல்லி பொற்றாளை அடைந்தவர்க்கே.

24. அடையாள நாள்மலர் அங்கையில் ஏடும் அணிவடமும்
உடையாளை நுண்ணிடை ஒன்றும் இலாளை, உபநிடதப்
படையாளை, எவ்வுயிரும் படைப்பாளைப் பதும நநுந்
தொடையாளை, அல்லது மற்று, இனியாரைத் தொழுவதுவே.

25. தொழுவார் வலம் வருவார், துதிப்பார் தம்தொழில் மறந்து
விழுவார், அருமறை மெய் தெரிவார், இன்ப மெய் புளகித்து
அழுவார், இன்னும் கண்ணில்நீர்மல்குவார் என்கண் ஆவது என்னை?
வழுவாத செஞ்சொற் கலைமங்கை பால் அன்பு வைத்தவரே.

26. வைக்கும் பொருளும், இல்வாழ்க்கைப் பொருளும், மற்றுளப் பொருளும்
பொய்க்கும் பொருள் அன்றி, நீடும் பொருள் அல்ல; பூதலத்தின்
மொய்க்கும் பொருளும், அழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளும், கலைமாது உணர்த்து உரைப்பொருளே.

27. பொருளால் இரண்டும் பெறலாகும் என்ற பொருள் பொருளோ?
மருளாத சொற்கலை வான்பொருளோ? பொருள் வந்து வந்தித்து
அருளாய் விளங்கு மவர்க்கு ஒளியாய் அறியாத வர்க்கு
இருளாய் விளங்கும் நலங்கிளர் மேனி இலங்கிழையே.

28. இலங்கும் திருமுகம்; மெய்யிற் புளகம் எழும்; கண்கள் நீர்
மலங்கும்; பழுதற்ற வாக்கும் வலிக்கும்; மனம் மிகவே
துலங்கும்; முறுவல் செயக் களி கூரும் சுழல் புனல் போல்
கலங்கும் பொழுது தெளியும், சொல்மானைக் கருதினர்க்கே.

29. கரியார் அளகமும், கண்ணும், கதிர் முலைக் கண்ணும், செய்ய
சரியார் கரமும், பதமும், இதழும், தவள நறும்
புரியார்ந்த தாமரையும், திருமேனியும், பூண் பனவும்
பிரியாது என்நெஞ்சினும் நாவினும் நிற்கும்; பெருந்திருவே.

30. பெருந்திருவும் சமயமங்கையும் ஆகி, என் பேதை நெஞ்சில்
இருந்தருளும் செஞ்சொல் வஞ்சியைப் போற்றில், எல்லா உயிர்க்கும்
பொருந்திய ஞானந்தரும்; இன்ப வேதப் பொருளும் தரும்;
திருந்திய செல்வம் தரும்; அழியாப் பெருஞ் சீர்தருமே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar