SS காரிய சித்தி தரும் மந்திரங்கள் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> காரிய சித்தி தரும் மந்திரங்கள்
காரிய சித்தி தரும் மந்திரங்கள்
காரிய சித்தி தரும் மந்திரங்கள்

1. நோயின்றி உடல் ஆரேக்கியமாக இருக்க

ஓம் நமோ நாரஸிம்ஹாய

இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 10 முறை சொல்லி வந்தால் வஜ்ரம் போல் அமைப்பு ஏற்படும்.

2. நினைத்த காரியம் நிறைவேற.

நிர்மலாய நிபந்தாய நிர்மோஹாய நிராக்ருதே
நமோ நித்யாய ஸத்யாய ஸத்காம நிராதய ச

இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 10 முறை பாராயணம் செய்து வரவும்.

3. ஆயுளை அதிகரிக்க

காலாந்தகாய கல்யாய கலநாய க்ருதே நம
காலசக்ராய சக்ராய வஷட்சக்ராய சக்ரிணே

இந்த ஸ்லோகத்தை காலை, மாலை 21 முறை பாராயணம் செய்ய தீர்க்காயுள் உண்டாகும்

4. நம் மனதில் ஏற்பட்டுள்ள நிரந்தர பயம் நீங்க தினம்.

ஸஹஸ்ர பாஹவே துப்யம் ஸஹஸ்ரசரணாய ச
ஸஹஸ்ரார்க்க ப்ரகாஸாய ஸஹஸ்ராயுத தாரிணே

இந்த ஸ்லோகத்தை காலை, மாலை 21 முறை ஜபிக்கவும். ஒரு சிறிய பாத்திரத்தில் சுத்தமான தீர்த்தம் வைத்து இதனால் மந்திரித்து உட்கொள்ளவும். வெகு சீக்கிரத்தில் பயம் நீங்கும்

5. துஷ்டக்ரஹங்கள் பூத ப்ரேத பிஸாசங்கள் விலக.

ஸத்ருக்நாய ஹ்யவிக்நாய விக்நகோடிஹராய ச
ர÷க்ஷõக்நாய தமோக்நாய பூதக்நாய நமோ நம

இந்த ஸ்லோகத்தை ஒரு மண்டலம் காலை, மாலை எட்டு முறை பாராயணம் செய்யவும்.

6. ஜ்வரம், ரோகங்கள், அபிசாரம், சூந்யம் ஒழிய.

ஸர்வ ஜ்வரவிநாஸாய ஸர்வ ரோகபஹாரிணே
ஸர்வாபிசார ஹந்த்ரே ச ஸர்வைஸ்வர்ய விதாயிநே

இந்த ஸ்லோகத்தை தினமும் காலை, மாலை 11 முறை பாராயணம் செய்யவும்.

7. புஷ்டியைப் பெற

மஹாதம்ஷ்ட்ராய துஷ்டாய நம: புஷ்டிகராய ச
ஸிபிவிஷ்டாய ஹ்ருஷ்டாய புஷ்டாய பரமேஷ்டிநே

இந்த ஸ்லோகத்தை தினமும் பத்து முறை பராராயணம் செய்து பசும்பாலில் ஜபித்து உட்கொண்டு வரவும்.

8. அபஸ்மாரம் (காக்காய் வலி) விலக.

அபம்ருத்யு விநாஸாய ஹ்யபஸ்மார விகாதிநே
அந்நதாயாந்நரூபாய ஹ்யந்நாயாந்ந புஜே நம:

இந்த ஸ்லோகத்தை தினமும் 18 முறை கூறி வர ஆறு மாதத்தில் அதிசயமான குணம் தெரியும்.

9. வாக்குவன்மை பெற

அத்வாதீதாய ஸத்வாய வாகதீதாய வாக்மிநே
வாகீஸ்வராய கோபாய கோஹிதாய கவாம்பதே

இந்த ஸ்லோகத்தை தினமும் 51 முறை காலை, மாலை பாராயணம் செய்யவும்

10. குழந்தைகளுக்கு ஏற்படும் பாலகிரஹதோசம் விலக.

நமோஸ்து நாராயண நாரஸிம்ஹ
நமோஸ்து நாராயண வீரஸிம்ஹ
நமோஸ்து நாராயண க்ரூரஸிம்ஹ
நமோஸ்து நாராயண திவ்யஸிம்ஹ

இந்த ஸ்லோகத்தை குழந்தைகள் தூங்கச் செய்யும் போது மூன்று முறை பாராயணம் செய்து தூங்க வைத்தால் தோஷம் அணுகாது

11. கண்களில் ஏற்படும் நோய் விலக.

ஸுஜ்யோதிஸ்த்வம் பரம்ஜ்யோதி
ஆத்மஜ்யோதி ஸநாதந
ஜ்யோதிர்லோகஸ்வரூபஸ் த்வம்
ஜ்யோதிர்ஜ்ஞோ ஜ்யோதிஷாம் பதி

இந்த ஸ்லோகத்தை அநுஸந்தாநம் பண்ணினால் பிரகாசமான கண்கள் வாய்க்கும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar