SS அவனாசிப் பத்து - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அவனாசிப் பத்து
அவனாசிப் பத்து
அவனாசிப் பத்து

1. வற்றாத பொய்கை, வளநாடு கண்டு
மலை மேலிருந்த குமரா !
உற்றார் எனக்கு ஒருபேரு மில்லை,
உமையாள் தனக்கு மகனே
முத்தாடை தந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே !
வித்தாரமாக மயில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !

2. ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும் உதவிப்
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாக நின்ற குமரா !
மேலான வெற்றிமயில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !

3. திருவாசல் தோறும் அருள் வேதமோத
சிவனஞ் செழுத்தை மறவேன்
முருகேச ரென்றே, அறியார் தமக்கு
முதலாகி நின்ற குமரா !
குருநாத சுவாமி குறமாது நாதர்,
குமரேச(ர்) என்ற பொருளே !
மறவாமல் வெற்றி மயில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !

4. உதிரந்திரண்டு பனியூர லுண்டு
உருவாசல் தேடி வருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்த குமரா !
யதிராய் நடந்து மயில்மீதி லேறி
வரவேணு மென்ற னருகே !

5. மண்ணாடு மீசன் மகனாரை யுன்றன்
மனை வீடு தந்தே யருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்த குமரா !
நன்றாக வந்தே யடியேனை யாண்டு
நல்வீடு தந்த குகனே !
கொண்டாடி வெற்றிமயில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !

6. நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்த குமரா !
கால னெழுந்து வெகுபூசை செய்து
கயிறு மெடுத்து வருமுன்
மேலும் பிடித்து அடியார் தமக்கு,
வீராதி வீர ருடனே
சாலப் பரிந்து மயில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !

7. தலைகட்ட நூலின் நிழல்போல  நின்று
தடுமாறி நொந்து அடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடவேற் கடம்பா
அடியேனை ஆளு முருகா !
மலையேறி மேயு மயில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !

8. வண்டுண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கை வடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவோர்கள் வாசல்
கடனென்று கேட்க விதியோ
வண்டூறு பூவிலிதழ் மேவுவள்ளி
தெய்வானைக் குகந்த வேலா
நன்றென்று சொல்லி மயில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !

9. விடதூத ரோடி வரும்போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளி யிடமாக வைத்து
மயிலேறி வந்த குமரா
திடமாகச் சோலை மலைமீதில் வாழும்
திருமால் தமக்கு முருகா !
வடமான பழநி வடிவேல் நாதா !
வரவேணு மென்ற னருகே !

10. ஓங்கார சக்தி <உமைபால் குடித்து
உபதேச முரைத்த பரனே !
பூங்கா வனத்திலிதழ் வேவும்வள்ளி
புஜமீ திருந்த குகனே
ஆங்காரசூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்த பூபா !
பாங்கான வெற்றிமயில் மீதிலேறி
 வரவேணு மென்ற னருகே !

11. ஆறாறுமாறு வயதான போது
அடியேன் நினைத்த படியால்
வேறேது சிந்தை நினையாம லுன்ற
னாசார சங்க மருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோடக் கட்ட வருமுன்
மாறாது தோகையில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !

12. கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்று மறியேன்
ஐயா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்கும் எளியேன்
பொய்யான காயம் அறிவே ஒடுங்க
வையாளியாக  மயில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !

13. ஏதேது ஜென்ம மெடுத்தேனா முந்தி
இந்தப் பிறப்பி லறியேன்
மாதா பிதா நீ மாயன் தனக்கு
மருகா குறத்தி கணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போக வருமுன்
வாதாடி நின்று  மயில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar