SS விநாயகர் சப்தகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> விநாயகர் சப்தகம்
விநாயகர் சப்தகம்
Read in English
விநாயகர் சப்தகம்

குருவே பரமன் கொழுந்தே பணிந்தேன்
குவலயம் போற்றும் கண நாதா!
வருவாய் நினைவில் வந்தெனை ஆள்வாய்
வடிவேலனின் சோதரனே!
அருள்வாய்! உனையே அனுதினம் பணிவேன்
அன்னை பராசக்தி அருள்மகனே!
திருமால் மருகா! திருவடி சரணம்!
தீன ரக்ஷகனே கணநாதா

ஆனையின் அன்பன் அழகு முருகனின்
அண்ணனாய் உலகில் அவதரித்தாய்
ஆனாமுகத்தோடு ஐங்கரங்கொண்டதோர்
அற்புதவடிவே! கணநாதா!
யானென தென்னும் எண்ணங்கள் நீங்கி
இகபரசுகமதை எனக்களிப்பாய்!
யானுனை என்றும் இராப்பகல் தொழுதேன்!
என்துயர் களைவாய்! கணநாதா!

குஞ்சரனே எழிற் குஞ்சரிநாதனாம்
குகசரவணபவ சோதரனே!
வெஞ்சமரெதிலும் வெற்றியே தருவாய்!
வேழமுகத்தோய் கணநாதா!
அஞ்சிடும் அன்பருக் கபயம் அளிப்பாய்!
அரவணைத் தெனையும் ஆண்டருள்வாய்!
பஞ்சமி!பைரவி!பார்வத புத்திரி!
பார்வதி மைந்தா! கணநாதா!

வல்லபை நாதா! விக்ன வினாயகா
வாழ்த்திப் பணிந்தேன் உன்பதமே:
வல்வினை எல்லாம் வலிமை இழந்தே
வாடிடச் செய்வாய் கணநாதா!
தொல்வினை யாலிவன் துயருறும் அடியேன்
துன்பமெலாம் நீ துடைத்திடுவாய்!
அல்லொடு பகலும் அனவரதமும் உன்
அடியினை தொழுவேன் கணநாதா!

வானொடு நீரும் வளியும் தீயும்
வையகம் யாவும் உன் வடிவே!
மானிட வாழ்வை மகிழ்வுறச் செய்வாய்
மங்கலப் பொருளே கணநாதா
தேனோடு பாலும் தெங்கோடு பழமும்
தெவிட்டா அமுதம் தினம் படைப்பேன்
ஊனொடு உயிரும் உணர்வும் புரப்பாய்!
உன்னடி தொழுதேன் கணநாதா!

ஓமெனும் வடிவே உன் வடிவாமென
உலகிற்கெல்லாம் நீ உணர்த்திடுவாய்!
ஆம் எனச் சொல்வாய்!அன்னை குமாரா
ஆதரித்தருள் வாய்! கணநாதா!
ஓமெனும் ஒலியில் உன்குரல் கேட்டே
உளமகிழ்ந்துள்ள புகழ் பாடிடுவேன்
ஓமெனும் பொருளே உமையவள் பாலா!
ஒரு பரம் பொருளே! கணநாதா

சங்கரன் மகனே! சஞ்சலம் தீர்ப்பாய்
சக்தி குமாரா! கணநாதா!
ஐங்கரனே! உன் அடியினை தொழுதேன்
அடைக்கலம் நீயே கணநாதா!
சங்கரித்திடுவாய் சங்கடமெல்லாம்
சம்புகுமாரா! கணநாதா!
சங்கரி மைந்தா! சந்ததம் பணிவேன்
சரணம்! சரணம்! கணநாதா!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar