Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நிரந்தரமல்ல வாழ்க்கை!
 
பக்தி கதைகள்
நிரந்தரமல்ல வாழ்க்கை!

கங்கைக்கரையில் திரிகடபா என்ற முனிவர் மனைவியுடன் வசித்தார். இவர்களுக்கு பாவன், புண்ணியன் என்று இரு மகன்கள். திரிகடபா நீண்டநாட்கள் வாழ்ந்து இறந்து போனார். கணவர் மீது பாசம் கொண்ட மனைவியும் அதிர்ச்சியில் இறந்தாள். பிள்ளைகள் இருவரும் கங்கைக்கரையில் அவர்களுக்குஇறுதிக்கடன்களைச் செய்தனர்.பெற்றோரின் பிரிவைத் தாளாத பாவன் மிகவும் கவலையில் ஆழ்ந்தான், அழுதபடியே இருந்தான். புண்ணியனோ யதார்த்தமாக இருந்தான். ஊரார் பார்வையில், பாவன் பாசக்காரன் என்றும், புண்ணியன் கல்நெஞ்சன் என்றும் பெயர் பெற்றனர்.ஒருநாள் பாவனை அழைத்த புண்ணியன், “சகோதரா! இறந்தவர்களுக்காக அழுவது என்பது பைத்தியக்காரத்தனமானது. ஏனெனில், சாவு என்பது நிச்சயமானது. அது நாம் விரும்பாவிட்டாலும் வந்தே தீரும். நம் பெற்றோர் அவர்கள் காலம் முடிந்து இறந்தனர். நாம் நம் காலத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறோம். நாம் முனிவரின் பிள்ளைகள். நாமே வாழ்க்கை நிரந்தரமானது என்று எண்ணலாமா!” என்று அறிவுரை சொன்னான்.பாவனுக்கு வாழ்வின் யதார்த்தம் புரிந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar