புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி வழிபாடு



பெண்ணாடம்; பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி முதல் நாள் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, கோவிலில் நேற்று முன்தினம் காலை 10:00 மணியளவில், உலக மக்கள் நலன் பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. 10:30 மணியளவில், சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், பகல் 11:00 மணியளவில் தீபாராதனை நடந்தது. 11:30 மணியளவில் முன் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் சுவாமிகள் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும், 21ம் தேதி முதல் சனிக்கிழமை புஷ்ப அலங்காரம், 28ம் தேதி இரண்டாம் சனியன்று காய்கறி அலங்காரம், அக்., 5ம் தேதி மூன்றாம் சனிக்கிழமை பழ அலங்காரம், 12ம் தேதி நான்காவது சனியன்று சந்தனகாப்பு அலங்காரம் மூலவர் சுவாமிக்கு நடக்கிறது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வவிநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்துள்ளனர்.


தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்