ராமர் பாலம் காண, தரிசிக்க சுற்றுலா படகு சவாரி : மே 15ல் இலங்கை அரசு துவக்குகிறது



ராமேஸ்வரம்; தனுஷ்கோடி, இலங்கை இடையே ஸ்ரீராமர் அமைத்த பாலத்தை கண்டு தரிசிக்க மே 15ல் இலங்கை அரசு சுற்றுலா படகு சவாரியை துவக்குகிறது.


ராமாயண வரலாற்றில் ஸ்ரீராமர் தனுஷ்கோடி, இலங்கை இடையே பாலம் அமைத்து சீதையை மீட்டு வந்தார். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த இப்பாலத்தை, ஹிந்துக்கள் புனித பாலமாக கருதி இன்றுவரை தனுஷ்கோடியில் அரிச்சல்முனை கடற்கரையில் நின்றபடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். 1914 முதல் 1964 வரை தனுஷ்கோடி, இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இருந்த சமயத்தில் சுற்றுலா பயணிகள் ராமர் பாலத்தை கண்டு ரசித்தும், தரிசித்தும் சென்றனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை, இலங்கை தலைமன்னார் இடையே 29 கி.மீ., தூரத்தில் கடல் நீரோட்டம், தட்பவெப்ப மாறுதலுக்கு ஏற்ப ராமர் பாலம் மீது 14 முதல் 18 மணல் தீடையில் காணப்படும். இதில் அரிச்சல்முனையில் இருந்து 5 முதல் 6 தீடையுடன் இந்திய எல்லை முடிந்துவிடும். மீதமுள்ள தீடைகள் இலங்கை வசம் உள்ளது.


சுற்றுலா சவாரி : ராமர் அமைத்த பாலத்தை கண்டு ரசித்து தரிசிக்க நேற்று மன்னார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், சுற்றுலா, பாதுகாப்புத்துறை அதிகாரிகள், போலீசார் பங்கேற்றனர். இதில் மே 15 முதல் தலைமன்னாரில் இருந்து சுற்றுலா படகு சவாரி துவக்க முடிவு செய்தனர். இதன் மூலம் உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி வெளிநாடு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை அரசு திட்டமிட்டு உள்ளது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்