எரியோடு; எரியோடு மணியகாரன்பட்டி தாயம்மன், வீரநாகம்மன், எருதமதாத்தப்பன், கிருஷ்ணர், முனியப்பசுவாமி கோயிலில் சித்திரை விழா நடந்தது. ஆண்டுதோறும் சித்திரை 10ல் இவ்விழா இங்கு நடக்கிறது. இதற்காக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்.14 முதல் மாலை அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள் செம்பாறை கன்னிமார் கோயில் ஊற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோயில் வந்தனர். இன்று காலை தீர்த்த அபிஷேகம், பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. விழா ஏற்பாட்டினை ஒக்கலிகர் வெள்ளவர் குல சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.