பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா துவங்கியது



பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. பழநி மேற்கு ரத வீதியில் உள்ள இக்கோயிலில் காலை 8:45 மணிக்கு கொடி கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பட்டர்கள் கார்த்திக், சீனிவாசன் கோபாலகிருஷ்ணன் ஏற்றினர். அதன்பின் லட்சுமி நாராயண பெருமாள் வீதி உலா நடைபெற்றது. இணைக் கமிஷனர் வெங்கடேஷ் கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி கலந்து கொண்டனர்.விழா நாட்களில் தினமும் இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா உநடைபெறுகிறது. மே 8 மாலை 6:00 மணிக்கு லட்சுமி நாராயண பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் ,மே 10 காலை 7:31 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. மே 11 இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவுபெறுகிறது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்