பாபநாசம் பாபநாச சுவாமி கோயிலில் மே.,4ல் கும்பாபிஷேகம்



திருநெல்வேலி: பாபநாசம் பாபநாச சுவாமி கோயிலில் நாளை மே 4ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி கரையில் அமைந்துள்ளது உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோயில். நவகைலாய தலங்களில் முதன்மையானது. பழமையான கோயிலின் கும்பாபிஷேகம் மே 4ம் தேதி நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் மே 1ல் தொடங்கியுள்ளது. ரூ.5 கோடி மதிப்பில் கோபுரம், சுவர்கள், மேற்கூரை ஆகிய திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் கோவில் முன்பு உள்ள சாலையில் இந்த ஆக்கிரமிப்பு இடிபாடுகள் அகற்றப்பட்டன. மே. 3, 4 தேதிகளில் அந்த வழியே பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் பாபநாசம் அணை மற்றும் மலைப்பகுதிக்கு செல்வதற்கும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்