பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்; இருப்பிடம் புறப்பட்டார்.. பரவத்துடன் வழியனுப்பிய பக்தர்கள்



மதுரை : சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வந்த கள்ளழகர் பூப்பல்லக்கில் அழகர் கோவில் புறப்பட்டார். பரவத்துடன் பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர்.


அழகர் மலையிலிருந்து மே 10ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 12ல் காலை வைகையாற்றில் எழுந்தருளினார். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் அழகருக்கு தீர்த்தவாரி நடந்தது. அன்று இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலில் தங்கினார். நேற்று காலை 9:00 மணிக்கு சேஷவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 3:00க்கு மேல் 4:00 மணிக்குள் கருடவாகனத்தில் வைகையாற்றில் உள்ள தேனுார் மண்டபத்தில் எழுந்தருளிய அழகர், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின், ராமராயர் மண்டபத்திற்கு திரும்பினார். நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் தசாவதார நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு மோகினி அவதாரத்தில் அழகர் புறப்பாடு நடைபெற்றது.  இன்று அதிகாலை 2:30 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் இருப்பிடம் புறப்பட்டார். பரவத்துடன் பக்தர்கள் வழியனுப்பினர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்