போடி; பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு போடி புதூர் பெரிய பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை தலைவர் தங்கப்பா தலைமையில் நடந்தது. இமாம் காதர் பாட்ஷா நூரி முன்னிலை வகித்தார். தொழுகையை ஒட்டி போடி புதூர் பெரிய பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடத்தினர். ஏராளமான இஸ்லாமியர்கள் திரளாக பங்கேற்றனர். டி.வி.கே.கே., நகர் பள்ளி வாசல் தலைவர் சையது அபுதாகீர், மேலத்தெரு பள்ளிவாசல் தலைவர் சர்புதீன், நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.