கடப்பேரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா



வானுார்; கடப்பேரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது. வானுார் அடுத்த கடப்பேரிக்குப்பம் கிராமத்தில் சுந்தரவிநாயகர், பிடாரி மீனாட்சி அம்மன், எல்லையம்மன், முத்துமாரியம்மன், திரவுபதியம்மன், வரதராஜப்பெருமாள், அய்யனார் கோவில் திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 1ம் தேதி மாரியம்மன்,  கெங்கையம்மன், போத்து ராஜா சுவாமி வீதியுலாவும், 2ம் தேதி கரகத்திருவிழா, விநாயகர், திரவுபதியம்மன், அர்ச்சுணன் வீதியுலாவும், 3ம் தேதி கெங்கைம்மனுக்கு கூழ்வார்த்தல், அம்மன் வீதியுலா நடந்தது. 4ம் தேதி வில் வளைத்தல், அர்ச்சுணன்–திரவுபதியம்மன் திருக்கல்யாணம், 5ம் தேதி இரவு 7;00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று இரவு தீமிதி திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்