திருவாதவூர் திருமறைநாதர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்



மேலூர்; திருவாதவூரில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருமறைநாதருக்கு வேதநாயகி அம்பாள் மற்றும் பிரியாவிடையுடன் திருக்கல்யாணம் நடந்தது. அதற்கு முன்பாக சுவாமிகளுக்கு முகூர்த்தப்பட்டு துணிகளை பல்லகில் வைத்து கோயிலை சுற்றி கொண்டு வரப்பட்டு சிறப்பு அலங்காரம் நடந்தது. பிறகு சிவாச்சாரியார்கள் மாலை மாற்றிக்கொண்டு அம்மனுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தனர். அதனை தொடர்ந்து பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் தாலி அணிந்து கொண்டனர். பிறகு திருக்கல்யாண விருந்து நடந்தது. நாளை (ஜூன் 8) தேரோட்டமும், ஜூன் 9 கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இணை, உதவி கமிஷ்னர்கள் கிருஷ்ணன், லோகநாதன், பேஷ்கார் ஜெயபிரகாஷ் செய்திருந்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில் அறங்காவலர் தலைவர் ருக்மணி, அறங்காவலர்கள் சுப்புலட்சுமி, மீனா, மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்