பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஐயப்பனுக்கு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவில் வளாகத்தில் ஐயப்ப சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதுபோன்று, மஞ்சள் அம்மன், காசி விஸ்வநாதர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். தொடர்ந்து, இன்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாளை ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலில் ஆடி மாதம் முதல் நாளான இன்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், 6:00 மணிக்கு கணபதி பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு நெய், பால், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு, சுவாமிக்கு அபிஷேக பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலில், காலை, 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. காலை, 6:00 மணிக்கு அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று, ஐயப்ப சுவாமியை வழிபட்டனர்.