வடமதுரை; வடமதுரை பகவதியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் கடந்த ஜூலையில் கும்பாபிஷேகம் நடந்ததை தொடர்ந்து 48ம் நாள் மண்டல பூஜைகள் நடந்தது. மூலிகைகள், திரவியங்கள் கொண்டு சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து புனித தீர்த்தம் கொண்டும் அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.