ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் ரெங்கதீர்த்தம் ரெங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நாளை (செப்.4) காலை 7:45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடந்தது. கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.