மேட்டுப்பாளையம்; தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பவித்ரோற்சவ வைபவத்தையொட்டி மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதவியுடன் திருவீதி உலா வந்தார்.
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள தென்திருப்பதி எனப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில், ஆண்டு தோறும் நடத்தப்படும் பவித்ரோற்சவ வைபவம், கடந்த புதன்கிழமை துவங்கியது. மூன்றாம் நாளான இன்று மலையப்ப சாமிக்கு ஸ்ரீதேவி, பூதவியுடன் விஸ்வக்சேன ஆச்சார்யர்களோடு, யாகசாலையில் பிரவேசம் செய்த நிலையில், சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து மலையப்ப சாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மேளதாள முழங்க திருவீதி உலா வந்தார். அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, சுவாமி திருவீதி உலா நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து, கோவிலை அடைந்த நிலையில், திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் செய்தனர்.