மழை வேண்டி.. மழை சோறு எடுத்து பெண்கள் வழிபாடு



பொங்கலூர்; நடப்பாண்டில் கோடை மழை எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. ஆடி, ஆவணி மாதத்தில் வெப்ப சலன மழை பெய்திருந்தால் விவசாயிகள் விதைப்பு பணியை துவக்கி இருப்பர். புரட்டாசி பிறந்தும் இன்னும் மழை பெய்யவில்லை. இதனால் கால்நடை தீவன தட்டுப்பாடு பூதாகரமாக உருவெடுத்துள்ளது. பல்லாண்டு தாவரங்களான தென்னை, பனை மரங்கள் கருகி வருகின்றன. இதனால் மழை வேண்டி பொங்கலூர் தங்காய்புதூரை சேர்ந்த பெண்கள் ஒவ்வொருவரும் பழைய சோற்றை எடுத்துக்கொண்டு வந்து பிள்ளையார் கோவிலில் வழிபட்டனர். பின்பு தண்ணீர் இல்லாததால் ஊரை விட்டு செல்வதாக கூறி, ஒப்பாரி வைத்துக் கொண்டு ஊர் எல்லையை கடந்து சென்றனர். அவர்களை ஊர் பெரியவர்கள் தடுத்து, விரைவில் நல்ல மழை பெய்து நாடு செழிக்கும் என்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அழைத்தனர். தாங்கள் கொண்டு சென்ற பழைய சோற்றை அனைவரும் அருந்தி பின் வீடு திரும்பினர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்