பிராமிக், தேவநாகரி, கிரந்தம், மலையாளம், திகளரி போன்ற பல்வேறு எழுத்துகளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்து பிரதிகளை சேகரித்து, காட்சிப்படுத்தி, திருத்தி வெளியிடும் மைசூரு லட்சுமிபுரத்தில் உள்ள ஓரியன்டல் ஆராய்ச்சி மையத்திற்கு வருகை தந்த ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் உத்தராதிகாரி ஜகத்குரு சங்கராச்சாரிய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ மஹா சுவாமிகள், அங்கிருந்த ஓலைச்சுவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.