பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. பழநி முருகன் கோயிலில் நேற்று (ஜன.12) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் எண்ணிக்கையில் ரூ. 3 கோடியே 59 லட்சத்து 98 ஆயிரத்து 486, வெளிநாட்டு கரன்சி 578 எண்ணங்கள், தங்கம் 524 கிராம் வெள்ளி 14.003 கிலோ கிடைத்தது. கல்லூரி மாணவர்கள்,அலுவலர்கள் உண்டியல் எணணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இணை கமிஷ்னர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.