பழநி: பழநி முருகன் கோயிலுக்கு காளை உடன் வந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமானோர் வருகை புரிகின்றனர். நேற்று பழநி அருகே மேல்கரைபட்டியைச் சேர்ந்த வீரக்குமார் கோயில் பூஜாரி தண்டபாணி தலைமையில் கோயில் காளையுடன் ஆறுமுக காவடி எடுத்து வந்தார். பரிவட்டம் கட்டி அலங்காரத்துடன் வந்த காளை கிரிவலம் சுற்றி வந்தது.
அதன் பின் முருகன் கோயிலுக்கு அழைத்து சென்றனர். மேள தாளத்துடன் சென்ற காளை கோயில் வெளி பிரகாரத்தில் வலம் வந்து கீழ இறங்கியது.
கிராம மக்கள் விவசாயம் வளம் பெற வேண்டி கோயில் காளை மாட்டை 41 ஆண்டுகளாக அலங்கரித்து பழநி கோயிலுக்கு அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.