நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் (எ) ராஜராஜேஸ்வரர் கோவிலில் தைமாத பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் மதியம் விநாயகர், ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
இரவு ராஜ ராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலாவாக வந்து ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.