ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஹிந்து அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் அமாவாசையை முன்னிட்டு வேலப்பர் சுவாமிக்கு அபிஷேகங்கள் சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்தனர். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆண்டிபட்டி மேற்கு ஓடை தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த அமாவாசை விழாவில் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் செய்து வழிபட்டனர். ஆஞ்சநேயர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் நடந்த அமாவாசை விழாவில் 49 அடி உயர மாகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.