கோவை: ஸ்ரீ காஞ்சி காமகோடி மந்திர் டிரஸ்ட் சார்பில் கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவிலில் உலக நன்மைக்காக லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஜெபித்தனர். நிறைவாக இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.