வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
3 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் காளி யம்மன் இக்கோயில் திருவிழா மார்ச் 13ல் அம்மன் சாட்டுதலுடன் துவங்கியது. மங்கம்மாள் கேணி விநாயகர் கோயிலில் காளியம்மன், பகவதியம்மன், மாரியம்மன் கரகம் பாலித்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கோயில் வந்தடைந்தது. தங்கை காளியம்மனுக்கு சீர் வழங்கும் நிகழ்ச்சிக்காக கருட வாகனத்தில் வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் தேர் வீதிகள் வழியே ஊர்வலமாக வந்து காளியம்மன் சன்னதி வந்தார். பின்னர் சீர் வழங்கும் நிகழ்ச்சி முடிந்ததும் பெருமாள் சன்னதி திரும்பினார்.