பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் யாக சாலை பூஜையுடன் இன்று துவக்கம்



கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.


கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 25ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


குறிப்பாக, யாக சாலை பூஜைக்காக, 55 குண்டங்கள் , 23 கலச மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 101 சிவாச்சாரியார்கள், 37 ஓதுவார் மூர்த்திகள், 21 வேத விற்பன்னர்கள் பூஜைகளை நடத்துகின்றனர். பூர்வாங்க பூஜைகள் கடந்த 18ம் தேதி துவங்கின.


நேற்று காலை மூர்த்தி ஹோமம், திஸா ஹோமம் நடந்தது. இன்று (22ம் தேதி) காலை 8:00 மணிக்கு பிரசன்னாபிஷேகம், பரிவார கலாகர்ஷணம், மாலை 4:00 மணிக்கு கும்பாலங்காரம், சுவாமி, அம்பாள் கலாகர்ஷணம், யாத்ராஹோமம், யாத்ராதானம், முதல் கால யாக சாலை பூஜை நடக்கிறது.


நாளை 23ம் தேதி காலை 7:15 மணி முதல், 12;00 மணி வரை விசேஷ சந்தி, கணபதி பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை 5:00 மணி முதல், 9:00 மணி வரை புண்யாவாசனம், மூன்றாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.


வரும், 24ம் தேதி காலை 7:30 மணி முதல், 12:00 மணி வரை அங்குரார்ப்பணம், நான்காம் கால யாக சாலை பூஜை, மாலை 5:00 மணி முதல், 9:00 மணி வரை சதுர்த்வார பூஜை, ஐந்தாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.


வரும், 25ம் தேதி காலை 4:00 மணிக்கு 6ம் கால யாக சாலை பூஜை, 6:00 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், 8:00 மணிக்கு நாடி சந்தானம், 9:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 10:30 மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், தொடர்ந்து, மூலவர் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. வரும், 26ம் தேதி மண்டலாபிஷேகம் துவங்குகிறது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்