திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் புஷ்பநாக ஊஞ்சலில் காரைக்கால் அம்மையார்



 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் புஷ்பநாக ஊஞ்சலில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த மாதம் 22ம் தேதி பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் 10ம் நாளான நேற்று இரவு காரைக்கால் அம்மையார் உத்சவ விழா விமரிசையாக நடந்தது. மாலை 6:00 மணியளவில் அம்மையாருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு 10:30 மணிக்கு புஷ்பநாக ஊஞ்சலில் தோன்றிய காரைக்கால் அம்மையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அம்மையாரை தரிசித்தனர். 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்