‘இறைவனை சரணடைய விஷ்ணு சஹஸ்ரநாமம்’



கோவை:‘ விஷ்ணு சஹஸ்ரநாமம் எனும் பொக்கிஷம்’ என்பது குறித்து ராம்நகர் கோதண்டராமர் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் சொற்பொழிவு நிகழ்த்தியதாவது:   விஷ்ணு சஹஸ்ரநாமம் மஹாபாரத போரின் போது தர்மர் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்களுக்கு பிதாமகர் பீஷ்மரால் அருளப்பட்டது.இதை அன்றாடம் பாராயணம் செய்வதால் பக்தி, ஆரோக்கியம், மன அமைதி ஏற்படும். எதிரிகள் விலகுவர், நோய்கள் நீங்கும், சகல சவுபாக்கியங்களும் ஏற்படும் . ஆன்மிக மேன்மைக்கு வழிவகுக்கும். பாப விமோசனம் கிடைக்கும். இது தவிர உயர்ந்த அன்புடன், எதிர்பார்ப்பின்றி இறைவனை சரணடையலாம்.  இவ்வாறு அவர் சொற்பொழிவு நிகழ்த்தினார். நாளை மாலையும் சொற்பொழிவு நடக்கிறது. முன்னதாக 5:30 மணிக்கு விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அனைவரும் பாராயணம் செய்யலாம். ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானத்திலுள்ள, ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் பிரவச்சன மண்டபத்தில் மாலை 6 முதல் 8 மணி வரை நடக்கிறது.  

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்