வில்லியனுார்: வில்லியனுார் துாய லுார்து அன்னை ஆலயத்தின் 149வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
வில்லியனுார் துாய லுார்து அன்னைஆலயத்தின் 149வது ஆண்டு பெருவிழா நேற்று துவங்கியது. காலை 5:30 மணிக்கு திருத்தல வளாகத்தில் உள்ள அருள்நிறை ஆலயத்தில் கூட்டு திருப்பலி நடந்தது.
பின், கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியேற்றி, விழாவை துவக்கி வைத்தார்.
ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலி, இரவு 7:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடக்கிறது. வரும் ஏப்., 19ம் தேதி ஆண்டு பெருவிழா நடக்கிறது.
அன்று காலை 7:30 மணிக்கு புதுச்சேரி – கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது. அன்று மாலை 6:00 மணியளவில் வேலுார் மறைமாவட்ட ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து தலைமையில் சிறப்பு திருப்பலி, இரவு 7:30 மணிக்கு மேல் வைரகிரீடம் சூட்டப்பட்டு மாதா ஆடம்பர தேர் பவனி நடக்கிறது.
ஏப்., 20ம் தேதி காலை 6:30 மணி திருப்பலிக்கு பின், கொடியிறக்கம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அருட்தந்தையர் ஆல்பர்ட், ஆல்வின் அன்பரசு, தோமினிக் சாவியோ, அலெக்சிஸ், பங்கு பேரவை இளைஞர்கள், பக்த சபையினர் மற்றும் வில்லியனுார் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.