காஞ்சிபுரம்: ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர விஜயம் முதல் பாகம் நுாலை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட, முதல் பிரதியை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரும், ஸ்ரீ பிரத்யக்ஷா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான ஜெயராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாசிரியர் புலவர் வே.மகாதேவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.