பத்ரிநாத் கோவில் நடைதிறப்பு: பிரதமர் மோடி பெயரில் முதல் மகா அபிஷேக பூஜை



உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, பாரம்பரிய சடங்குகள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீ பத்ரிநாத் தாம் ஆலயத்தின் புனிதக் கதவுகள் திறக்கப்பட்டன. தலைமை அர்ச்சகர் கோவில் நடையைத்திறந்து, மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்தார். 


பத்ரிநாத் தாம் கோவில் புனிதக் கதவுகள், இந்த ஆண்டு ஏப்ரல் 23 அன்று காலை 6:15 மணிக்கு பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது. இந்தியா முழுவதிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 15,000 பக்தர்கள், இறைவன் பத்ரி விஷால் மற்றும் அணையாத அகண்ட ஜோதியின் முதல் தரிசனத்தைப் பெறுவதற்காக அங்கு திரண்டிருந்தனர். உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அவர்கள், நாட்டின் செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தித்து, பிரதமர் நரேந்திர மோடி பெயரில் முதல் மகா அபிஷேக பூஜையை நிறைவேற்றினார். மேலும், லட்சுமி ஆலயம், கணபதி ஆலயம் மற்றும் ஆதி குரு சங்கராச்சாரியாரின் சன்னதி உள்ளிட்ட துணை ஆலயங்களிலும் முதலமைச்சர் தாமி சிறப்புப் பிரார்த்தனைகளைச் செய்தார்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்