நத்தம்: -நத்தம் அருகே குட்டூர் அய்யனார், கருப்புசுவாமி, வல்லடியரான், பட்டாணி, கன்னிமார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதையொட்டி சுவாமிகள் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜை செய்ய கண் திறக்கப்பட்டது. பின்னர் கோயிலுக்குள் சென்ற சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து விநாயகர், அய்யனார், கருப்புசாமி, வல்லடியரான், பட்டாணி, கன்னிமார் மதிலை, குதிரை சிலைகள் வாணவேடிக்கை, வர்ணக்குடைகளுடன் ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.